Tuesday, November 2, 2010

காக்கைச் சிறகினிலே நந்தலாலா

காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

(காக்கை)

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா -நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

(காக்கை)

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா -நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா -நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

(காக்கை)